அனுராதபுரம் சிறைச்சாலையில் இடம்பெற்ற அமைதியின்மையின்போாது நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் பலத்த காயமடைந்த கைதியொருவர் அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்று (21) உயிரிழந்துள்ளார்.
தலையில் துப்பாக்கிச் சூடு பட்டிருந்தமையே இந்த கைதியின் மரணத்திற்குக் காரணம் என அனுராதபுரம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் டொக்டர் துலான் சமரவீர உறுதிப்படுத்தியுள்ளார்.
சிறைச்சாலையில் இடம்பெற்ற அமைதியின்மையின்போது காயமடைந்த மேலும் மூன்று கைதிகள் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.