இலங்கையில் தகவல் கல்வியறிவை ஊடகவியலாளர்கள் மற்றும் அது பற்றி ஆவலுள்ள பிரஜைகள் மத்தியில் ஊக்குவிப்பதற்காக இலங்கை புலனாய்வு ஊடகவியல் மையம் (CIR) நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
இதன் பொருட்டு, கொழும்பிலுள்ள ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தித் திட்டத்துடன் (UNDP) இணைந்து நாடளாவிய ரீதியில் இணையத்தளம் வழியாக CIR இன் ஊடக கல்வியறிவு அடிப்படைகள் தொடர்பான பயிற்சி செயலமர்வுகளை நடத்தும் முயற்சிகளை ஜூன் மாத நடுப்பகுதியில் இருந்து முன்னெடுப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
இந்தப் பயிற்சி செயமர்வு சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் தலா இரண்டு அமர்வுகள் வீதம் நடத்தப்படவுள்ளது.
பயிற்சி செயலமர்வில் பங்குபற்றுபவர்களுக்கு, நாட்டில் தகவல் கல்வியறிவை மேம்படுத்தும் முயற்சியின் ஓரங்கமாக அடிப்படை பயிற்சிகள் வழங்கப்படும்.
ஊடகவியலாளர்கள், ஊடகத்துறை மாணவர்கள், பிரஜை ஊடகவியலாளர்கள், ஊடக கல்வியியலாளர்கள், வலைப்பதிவர்கள், காணொளிக் கதைகூறுபவர்கள் மற்றும் ஊடகப் பயனாளர்கள் உட்பட 300 பேருக்கு இந்த திட்டத்தின் ஊடாக பயிற்சியளிக்கப்படவுள்ளது.
(ஆர்வமுள்ள ஊடகவியலாளர்கள் விண்ணப்பிக்கலாம்.)
பதிவுகளுக்கான இணைப்பு கீழே தரப்பட்டுள்ளது.
ஊடகக் கல்வியறிவு அடிப்படைகள் விண்ணப்பம் (கிளிக் செய்க)
தகவல் மூலம்: https://cir.lk/
#MediaLiteracy #Knowledge #opportunities #SriLanka