கேஸ், பால்மா, கோதுமை மா மற்றும் சீமெந்து என்பவற்றின் மீதான கட்டுப்பாட்டு விலைகளை நீக்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
ஜனாதிபதிக்கும், அமைச்சரவை அந்தஸ்துடைய அமைச்சர்களுக்கும் இடையில் இன்று (07) நடைபெற்ற விசேட அமைச்சரவை சந்திப்பின்போதே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
எனினும், தேவையற்ற முறையில் விலைகள் உயர்த்தப்படுவதற்கு இடமளிக்க வேண்டாம் என ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார். (Kandy Tamil News)