வடக்கு மாகாண ஆளுநராக, தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் உறுப்பினர் ஜீவன் தியாகராஜா ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஆளுநர் பதவிப்பிரமாண நிகழ்வு ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (11) முற்பகல் இடம்பெற்றது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ முன்னிலையில், புதிய ஆளுநராக ஜீவன் தியாகராஜா இதன்போது பதவிப்பிரமாணம் செய்துகொண்டார். (kandytamilnews.com)